மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானிற்கு கிளிநொச்சியிலும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மலையாளபுரம் வடக்கு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் கிளிநொச்சி, யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு கறுப்பையா சேகர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மலையாளபுரம், பாரதிபுரம் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானிற்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி